top of page

En Manathai Aala Vaa! 4

Updated: Sep 25, 2022

மித்ர-விகா-4


"இவங்க ஃப்ரெஷ்ஷர்தான" வேண்டுமென்றே ஒன்றுமே தெரியாதவன் போல மித்ரன் கேட்கவும், கடுப்பானது கவிக்கு. இருந்தாலும், 'எஸ் பாஸ்” என்றான் பவ்யமாக.


அதற்குள் கவியின் கைப்பேசி ஒலிக்கவும், அவன் மித்ரனின் முகத்தைப் பார்க்க, "யா கவி! நீ போ” என்றான் அவன் பெருந்தன்மையுடன். மாளவிகாவை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே கவி வெளியில் சென்றுவிட, "எந்த காலேஜ்ல படிச்சீங்க?"


அவன் எதார்த்தமாய் கேட்க, பதில் சொன்னாள் மாளவிகா.


"ஓஹ் யா... நான் உங்க காலேஜ் கல்ச்சுரல்ஸ்க்கு வந்திருந்தேனே”


அவன் சொல்ல, "ம்ம்.. தெரியும். நான் அன்னைக்கு ஒரு டான்ஸ் பண்ணேன்" என்றாள் சற்றுப் பெருமையுடன்.


அவனுக்கு அவளை நினைவிருக்கலாமோ என்ற எதிர்பார்ப்பை அவளுடைய வான் மிதக்கும் கண்களுக்குள் கண்டுகொண்டவன், "ஓஹ். அப்படியா? ஏதவாது க்ரூப் டான்ஸ்லயா?" எனக்கேட்டான் அவளுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்து.


"இல்லை" என்பதற்கு மேல் விளக்க அவளுக்குமே விருப்பமில்லாமல் போக, 'எனக்கு இங்கே வேலை செய்ய விருப்பமில்லை' என்று அவனிடம் சொல்லிவிடத் துடித்த நாவை அடக்கியவள், மௌனத்தைத் தத்தெடுத்தாள்.


அதற்குள் கதவைத் தட்டிவிட்டு மறுபடியும் உள்ளே நுழைந்த கவி, "அருணா ஆக்ரோல இருந்து ரேட் ஃபைனலைஸ் பண்ணி மெயில் அனுப்பியிருக்காங்களாம். செக் பண்ண சொல்லி அவங்க மார்க்கெட்டிங் ஹெட் ஃபோன் பண்ணாரு. நீங்க ஒரு தடவ பார்த்துடீங்கன்னா நான் ரிப்ளை பண்ணிடுவேன்" என்றான் பழக்கத் தோஷத்தில்.


"நீ மத்த வேலையைக் கவனி கவி. இதுக்குத்தானே இவங்களை அப்பாயிண்ட் பண்ணியிருக்கோம். இனிமேல் இந்த வேலையெல்லாம் மால்வி பார்த்துப்பாங்க" அவன் கட்டளை போலச் சொல்ல, 'என்னாது... மாளவியா?' என உள்ளுக்குள்ளேயே கடுப்பாகிப் போனவள், 'ஐயோ. இப்போதைக்கு வெளிய போகவே விடமாட்டான் போலிருக்கே. ஒரு சின்ன கேப் கிடைச்சாலும் இந்த கவியரசு கிட்ட சொல்லிட்டு நாம எஸ் ஆகிடலாம்' என நினைத்தவாறே அவனுடைய முகத்தை யோசனையுடன் பார்த்தாள் மாளவிகா.


அதற்குள் கவி அங்கிருந்து சென்றிருக்க, தன்னுடைய மடிக்கணினியில் அந்த மின்னஞ்சலைப் படித்தவன், அவனுடைய அறையின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த கணினியைச் சுட்டிக் காண்பித்து, "அதை இனிமேல் நீ யூஸ் பண்ணிக்கலாம். அதுல நம்ம கம்பெனி மெயில் ஐடி லாக் இன் ஆகியிருக்கு. அருணா ஆக்ரோஸ், கோட் செஞ்சிருக்கற அமௌன்ட்க்கு ஓகே பண்ணி அதுல இருந்து இந்த மெயிலுக்கு ரிப்ளை பண்ணிடு”


மித்திரன் சொல்லவும், 'என்ன ‘ங்க’லாம் காணாம போயிருக்கு. திமிரு பிடிச்சவன். கவி எப்படியும் இவனை விட வயசுல பெரியவராதான் இருப்பாரு. அவரையே வா போன்னு சொல்றான். நாமெல்லாம் எம்மாத்திரம்' மனதிற்குள் அவனை வருத்தாலும் அவன் சொன்ன வேலையைத் தட்ட இயலாமல் செய்து முடித்தாள் மாளவிகா.


அதன் பின் 'ஒரு கொட்டேஷன் அடிக்கணும்' 'ஒரு எஸ்டிமேஷன் ரெடி பண்ணனும்' என அவளது பணி நீண்டு கொண்டே போக, மதிய இடைவேளை வரை அவளை அங்கே இங்கே நகரவிடவில்லை அவன்.


சாப்பிட நேரம் ஆகவும் விட்டால் போதுமென்று கவியைத் தேடி வந்தவள் அவன் அங்கே இல்லாமல் போக தன் 'கேபின்'னுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டாள். சாப்பிடக்கூடப் பிடிக்கவில்லை அவளுக்கு.


பெண்களுக்கே உரித்தான ஒரு எச்சரிக்கை மணியின் ஓசை அவளுடைய மனதிற்குள் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருந்தது. யோசனையுடன் அவள் அப்படியே உட்கார்ந்திருக்க, அவளை தன் 'கேபினு'க்கு வரச்சொல்லி 'இண்டர்காம்' மூலம் அழைத்தான் கவி. அவள் ஒரு முடிவுடன் அங்கே செல்ல, "உங்க அக்சஸ் கார்ட் ரெடியா இருக்கு. நம்ம ஹெச் ஆர்ல கலெக்ட் பண்ணிக்கோங்க. அண்ட் அட்டெண்டன்ஸ்க்கு பயோ மேட்ரிக்ஸ் அண்ட் தென் பேஸ் ரெகக்னிஷன் எல்லாம் அங்கேயே எடுத்திருவாங்க. ஈவினிங் வீட்டுக்குக் கிளம்பறத்துக்கு முன்னால முடிச்சிட்டு கிளம்புங்க” அவன் சொல்லிக்கொண்டே போக, அதைக் கண்டுகொள்ளாமல், "என்னால இங்க கண்டின்யு பண்ண முடியாது மிஸ்டர் கவியரசு! ரிலீவ் ஆக என்ன ப்ரொசீஜர்ன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?"



கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் அவள் கேட்கவும் அதிர்ந்த கவி, "ஐ காண்ட் கெட் யூ" எனப் புரியாமல் கேட்க, "இல்ல.. என்னை ரிலீவ் பண்ண என்ன பார்மாலிடீஸ்ன்னு கொஞ்சம் சொல்லுங்க"


அவள் அழுத்திச் சொல்ல, "நீங்க காண்ட்ராக்ட் சைன் பண்ணியிருக்கீங்க மிஸ் மாளவிகா. இப்ப இப்படி சொல்றீங்க?"


அவன் கொஞ்சம் கண்டிப்புடன் கேட்க, "நேத்துதானே சைன் பண்ணேன். கேன்சல் பண்ண முடியாதா?"


சற்று தகைந்த குரலில் அவள் கேட்கவும், "நல்ல சேலரி பேக்கேஜ். வைட் ஸ்கோப் இருக்கற வேல. நீங்க ஏன் வேண்டாம்னு சொல்றீங்கன்னு புரியல. நான் எதுக்கும் பாஸ் கிட்ட கேட்டுச் சொல்றேன்”


அவன் பட்டும் படாமல் சொல்லவும் தன் அறைக்குத் திரும்ப வந்தாள் அவள்.


சில நிமிடங்களில் அவளுடைய அறையில் உள்ள இடைச்செய்தி தொடர்பு கருவி (இன்டர்காம்) ஒலிக்க, அதை எடுத்தாள் மாளவிகா.


"கம் டு மை கேபின் இம்மீடியட்ல்லி" கட்டளையாக தோரணையுடன் ஒலித்தது மித்ரனின் குரல்.


'நாம என்ன இவனோட அடிமையா? இவன் கூப்பிட்டா உடனே நாம போகணுமா? அதான் இவன் கிட்ட வேலை செய்ய மாட்டேன்னு சொல்லிட்டோமே.' குதர்க்கமான எண்ணம் தோன்ற அதை அலட்சியம் செய்தாள் மாளவிகா.


உடனே தன் கைப்பேசியை உயிர்ப்பித்தவள் வேலைக்கான ஒப்பந்தங்களைப் பற்றி அறிந்துகொள்ளும் பொருட்டு 'கூகுள்' செய்ய அவளது அறையின் கதவு வேகமாகத் திறக்கப்படுவதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள் மாளவிகா. அவளை நோக்கி அங்கே வந்துகொண்டிருந்தான் அக்னிமித்ரன்.


சிறு சிறு தடுப்புகளாகப் பிரித்து கணினிகள் போடப்பட்டிருந்த, அந்த அறைக்கு வெளியிலிருந்த மிகப்பெரிய அலுவலக கூடத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அப்படியே எழுந்து நிற்பது கண்ணாடித் தடுப்பின் வழியாகத் தெரிந்தது.


அவர்கள் முகத்திலெல்லாம் அப்படி ஒரு வியப்பு. மித்ரனின் முகத்திலோ சற்று அளவுக்கதிகமான கடுமை. உள்ளுக்குள்ளே கொஞ்சம் கலவரம் செய்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் அவள் நிதானமாக எழுந்து நிற்க, அவளை அமருமாறு ஜாடை செய்துவிட்டு அவளுக்கு எதிரில் போடப்பட்டிருந்த இருக்கையில் தோரணையாக உட்கார்ந்தான் மித்ரன்.


அவன் அங்கே நுழைந்ததைக் கவனித்துவிட்டுப் பதறி ஓடிவந்தான் கவி. 'என்ன இப்படிச் செய்கிறாய்' என்பதுபோல் இறைஞ்சுதலாக அவன் அவளை ஒரு பார்வை பார்க்க, "நீ எதுக்கு இப்ப இங்க வந்த கவி. யூ பெட்டெர் கோ டு யுவர் கேபின்" மித்ரன் சொன்ன தோரணையில் உடனே அங்கிருந்து அகன்றான் கவி.


அனிச்சை செயலாக அவள் தன் கைப்பேசியை மேசை மேல் வைத்துவிட்டு உட்கார, அவள் தேடிக்கொண்டிருந்த தகவல்கள் அதில் பட்டியலிடப்பட்டிருப்பதைப் பார்த்தவனின் இதழ்கள் இகழ்ச்சியுடன் வளைந்தன.


"உன்னை யாரும் இங்கக் கண்ணைக் கட்டித் தூக்கிட்டு வந்து வேலை பாக்க சொல்லல ரைட்"


அவன் குதர்க்கமாகக் கேட்க, "பட்.. உங்களுக்கு பீ.ஏ.வாதான் என்னை அப்பாயிண்ட் பண்றதாவும் யாரும் சொல்லலையே”


அவள் கண்களிலும் வார்த்தையிலும் இருந்த கூர்மையைக் கவனித்தவனின் புருவம் மேலே உயர, "வாட்? அப்படினா என் கிட்ட வேலை செய்ய பிடிக்கலன்னு சொல்லவரியா?"


அவன் எகத்தாளமாகக் கேட்க, அவனது 'ஈகோ'வை சீண்டுவதுபோல் பதிலுக்கு அவள் காத்த மௌனம் அவளது எண்ணத்தைச் சொல்லிவிட, கொதித்தே போனான் அக்னிமித்ரன்.


கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்கள் காத்திருந்து அவளை அருகில் கொண்டு வந்திருக்கிறான். அவள் 'போகிறேன்' என்று சொல்லவும் அவனால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.


எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் அவன் இருக்கும் இடத்திற்கு மற்றவர்களை வரவைத்துதான் அவனுக்கு பழக்கம். கவியின் முழு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இந்தப் பகுதிக்குள் அவன் நுழைந்தே பல மாதங்கள் ஆகியிருக்கும்.


அவளைக் கூப்பிட்ட பிறகும் கூட அவள் தன்னைத் தேடி வராமல் போக, இனிமேலும் அவள் சர்வ நிச்சயமாகத் தன்னைத் தேடி வரமாட்டாள் என்பது விளங்கவே, அவனாகவே அங்கே வந்தான்.


எத்தனையோ பெண்கள் அவனுடைய அருகாமைக்காக ஏங்கிக் கொண்டிருக்க, 'உன்னிடம் வேலை செய்ய எனக்கு விருப்பம் இல்லை' என்று அவள் நேரடியாகவே சொன்ன விதத்தில், 'உன்னை மொத்தமா மாத்தி, நீ இல்லாம என்னால வாழவே முடியாதுங்கற அளவுக்கு உன்னைக் கொண்டு வரல என் பேர் அக்னிமித்ரன் இல்லடி' என மனதிற்குள் சூளுரைத்துக் கொண்டான் அவன்.


"உன்னோட மூணு மாச சம்பளம், தட் இஸ்.. ஒன் லாக் டுவென்டி தவ்சண்ட் ருபீஸ், அதை பே பண்ணிட்டு நீ இப்பவே போகலாம். இல்லனா நீ கான்ட்ராக்ட்ல மென்ஷன் பண்ணியிருக்கற மாதிரி மூணு மாசம் நோட்டிஸ் கொடுத்துட்டு இந்த வேலைல இருந்து விலகிக்கோ. வேற வழி இல்ல மிஸ் மாளவிகா"


அவன் கறாராகச் சொல்ல, அதிர்ந்தாள் அவள்.


"உன்னோட ட்ரைனிங்காக எங்க கம்பெனில இருந்து ஒரு ஹ்யூஜ் அமௌன்ட் ஸ்பெண்ட் பண்ணியிருக்கோம். இப்படி ஜஸ்ட் லைக் தட் போறேன்னு சொன்னா விட்டுடுவோமா என்ன" குரலை இறங்காமல் சொல்லிக்கொண்டே போனான் அவன்.


கோபத்திலோ அல்லது இயலாமையிலோ கன்றிச் சிவந்த அவளது முகத்தைப் பார்த்துக்கொண்டே, "இன்னைக்கு வேலையை முழுசா முடிச்சு கொடுத்துட்டு, வீட்டுக்குப் போய் நல்லா யோசி. எப்படியும் முட்டாள்தனமா முடிவெடுக்கமாட்டன்னு நம்பறேன்”


மெல்லிய கிண்டலுடன் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான் மித்ரன்.


அதன் பின் நச நசவென ஏதேதோ வேலைகள் வரிசையாக அவளுக்குக் கொடுக்கப்பட அனைத்தையும் முடித்து அங்கிருந்து கிளம்பியவள் அந்த அலுவலகத்தின் வாகன நிறுத்தத்தை அடைந்தாள்.


அவளை வந்து அழைத்துச்செல்லுமாறு அன்புவுக்கு அவள் குறுஞ்செய்தி அனுப்பியிருக்க அவளுக்காக தன் இருசக்கர வாகனத்துடன் அங்கே காத்திருந்தான் அவன்.


தலையைத் தொங்க போட்டுக்கொண்டு ஏதோ சிந்தனையுடன் உற்சாகம் வடிந்ததைப் போன்று வந்துகொண்டிருந்த மாளவிகாவைப் பார்த்ததும் அவனது நெற்றிச் சுருங்கியது.


"என்ன பப்பி. ஏதாவது பிரச்சனையா? ஏன் உன் மூஞ்சி இப்படி இஞ்சி தின்ன மங்கி மாதிரி இருக்கு" அவன் கிண்டலாகக் கேட்டாலும் அதில் அவன் அக்கறை வெளிப்பட, ஆனாலும் அவனை முறைத்தாள் மாளவிகா.


"நோ காளியாத்தா பார்வை. மேட்டர் என்னன்னு சொல்லு" அவன் அதிலேயே இருக்க, "அன்பு!. அந்த 'அக்மி மார்கட்டிங்' யார் கம்பெனின்னு உனக்கு தெரியுமா?"


அவன் வண்டியைக் கிளப்பவும், கேட்டுக்கொண்டே அவனுக்குப் பின்னால் உட்கார்ந்துகொண்டாள்.


"ஏன் மாலு. அது வீனஸ் மீடியாவோட சிஸ்டர் கன்செர்னா”


அவன் நிதானமாகக் கேட்க அவன் தலை கவசம் அணிந்திருந்ததால் அவன் பேசுவதை உன்னிப்பாக கவனித்தால்தான் புரியும் என்பதினால் அவனது தோளுக்கு அருகில் தலையை நீட்டி அவள் பதில் சொல்லும் முன்பே, "அப்பவே நினைச்சேன் மால்ஸ். ஏன்னா வீனஸ் டிவி மாதிரி ஆளுங்க ஏதோ ஒரு ப்ரெமிசஸ்ல ஆஃபிஸ ஷேர் பண்ண மாட்டாங்க. அந்த மொத்த காம்ப்ளக்ஸும் அவங்களோடதாதான் இருக்கும்னு" என்றான் அன்பு.


"அடப்பாவி வம்பு. இதை முதல்லயே சொல்லி இருக்கக் கூடாதா?" என்று கேட்டவாறு அவன் தோளில் அடித்தவள், "நான் இந்த வேலையே வேண்டாம்னு சொல்லியிருப்பேனே" என்றாள் ஒருவித இயலாமையுடன்.


"ஹேய். அக்மி ஒரு செயின் ஆஃப் ரீடைல் ஸ்டோர்ஸ் அதாவது சூப்பர் மார்கெட்ஸ்தானே. நீ அது சம்பந்தமா எக்ஸ்பீரியன்ஸ் கெய்ன் பண்ணணும்னுதான ஆசைப்பட்ட? அப்பறம் என்ன பிரச்சனை?" அவன் இலகுவாகக் கேட்க, "இல்ல... என்னை அந்த அக்னிமித்ரனுக்கு பீ.ஏ.வா அப்பாயிண்ட் பணியிருக்காங்க அன்பு. அது இன்னைக்குத்தான் எனக்குத் தெரியும்" என்றவள் அனைத்தையும் சொல்லி முடிக்க,


"லூசா நீ. நான் உன் கிட்ட இதை எதிர்பார்கலை மாலு. அவன் என்ன பேயா இல்ல பிசாசா நீ அவனைப் பார்த்து மிரண்டுபோய் பின் வாங்க" என அவளைக் கடிந்துகொண்டான் அன்பு.


"அதில்ல அன்பு! அவனைப் நேர்ல பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஒரே படபடப்பா வருது. அது ஒரு நியூ ஃபீல் அன்பு. உனக்கு சொன்னா புரியாது. எனக்கு அது சரியா படலடா"


மனதில் உள்ளதை உள்ளபடி மறைக்காமல் அவனிடம் சொன்னாள் மாளவிகா.


"ச்ச... இவ்வளவுதானா. நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்” என பெருமூச்சு விட்டவன், "ஸ்பெசிமென் ஃபிகர்னு சொல்லுவாங்க இல்ல. நீ அதை கேள்விப்பட்டதில்லையா?"


அவன் கேட்க, "கேள்விப்பட்ட மாதிரி இருக்கு; பட் ஞாபகம் இல்ல"


அவள் சொல்லவும், "அதாவது ஆணோ பெண்ணோ.. எல்லாரையும் அட்ராக்ட் பண்ற மாதிரி ஒரு பர்பக்ட் பாடி ஷேப். ஹைட், கலர், முக ஜாடை இப்படி அவங்களோட எல்லா அம்சங்களும் எல்லாருக்குமே பிடிக்கற வகைல இருக்கும். இந்த அக்னிமித்ரன் அப்படி ஒரு ஸ்பெசிமென் ஃபிகர். கூடவே அவன் செலிபிரிட்டி வேற. ஸோ அவன் முகத்தை அடிக்கடி நாம பார்த்துப் பார்த்து பழக்கப்பட்டிருக்கோம். அதனால அவனைப் பார்த்து நீ அட்ராக்ட் ஆகி இருக்க. அவ்வளவுதான். இதை லைட்டா எடுத்துக்கோ பப்பி. இதுக்கு பயந்துட்டு ஒரு லட்சம் ரூபாயை விரயம் பண்ணனுமா சொல்லு”


அவன் சொல்லவும் மௌனமாகக் கேட்டுக்கொண்டாள் மாளவிகா.


"ஒண்ணு பண்ணு பப்பி. இது ஒரு சாதாரண இன்பாக்ச்சுவேஷன்னு உனக்கே புரியுது இல்ல. அதனால முதல்ல ஒரு.. ஒரு மாசம் இந்த வேலையைக் கத்துக்க ட்ரை பண்ணு. அப்படியும் உனக்கு ஏதாவது டிஸ்ட்ராக்ஷன் இருந்தாலோ இல்ல வேற ஏதாவது ப்ராப்ளம் இருந்தாலோ அப்ப பணத்தைக் கட்டி வேலையை விட்டுடலாம். ஓகே வா"


அவன் கரிசனையுடன் கேட்க, மௌனமாகத் தலை அசைத்தாள் அவள். அது அவன் பார்வையில் பதியாத காரணத்தால், அவள் பதில் சொல்லவில்லை என்ற எண்ணத்தில் அவன் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டுத் திரும்பி அவளது முகத்தைப் பார்க்க, அது தெளிவில்லாமல் இருக்கவும், "நாம வேணா அய்யாவைப் போய் பார்த்துட்டு வீட்டுக்குப் போகலாமா. அவர் ஒரே செகண்ட்ல உன் பிரச்னையை சால்வ் பண்ணிடுவார்" என அவன் கேட்க, உற்சாகமாகத் தலை அசைத்தாள் அவள்.


இரும்புலியூர் செல்லவேண்டிய அவனுடைய வாகனம் மணிமங்கலத்தை நோக்கித் திரும்பியது.


***


முந்தைய நாள் குழப்பங்கள் ஏதும் இல்லாமல் தெளிவான மனநிலையில் அலுவலகத்திற்குள் நுழைந்தாள் மாளவிகா.


அவளது தற்காலிக அடையாள அட்டையின் உதவியுடன் அலுவலகத்திற்குள் பிரவேசித்தவள், மின்தூக்கியில் நுழைந்து அதிலிருந்த கண்ணாடியில் வழக்கம்போல் தன்னை ரசித்துக்கொண்டாள். வழக்கமான உற்சாகம் அவளிடம் மீண்டிருக்கவே,


"மானாமதுர மாமரக்கிளையிலே...


பச்சக்கிளி ஒண்ணு கேட்டது கேட்டது கேள்வி என்ன?


என் கண்ணு ரொம்ப அழகா?


என் ரக்க ரொம்ப அழகா?


இந்த கேள்வி எனை கேட்டால் என்ன நான் பாடுவேன்?


ஊ லலலா... உஊ லலலா... உல்ல ல ல ல லா லா லா...


அனிச்சையாக அவள் சீழ்க்கையில் இசைக்க, முன்பு போல் ஐந்தாவது தளத்தில் அந்த மின்தூக்கி நிற்கவும் மௌனமானாள் அவள். அன்று அவளது எண்ணத்தைப் பொய்யாக்காமல் உள்ளே நுழைந்தான் மித்ரன்.


அதற்கு முன்பே தன் சீழ்க்கையை நிறுத்திவிட்டதை உணர்ந்தவளுக்கு ஏனோ சிரிப்பு வர, அதை முயன்று அடக்கினாள் மாளவிகா.


அவளது சுழித்த இதழ்களும் சிரிக்கும் விழிகளும் அவனை வெகுவாக பாதிக்க, முயன்று அவளிடமிருந்து தன் பார்வையை மீட்டுக்கொண்டான் மித்ரன்.


அதற்குள் அவள் இறங்கவேண்டிய ஒன்பதாவது தளம் வர, மின்தூக்கியின் கதவு திறக்கவும், அவள் வெளியே செல்லும் முன் கை நீட்டி அவளைத் தடுத்தவன், என்னோட ஆஃபிஸ் ஃப்ளோர்க்கு வா" என்றான் ஒரு முதலாளிக்கே உரியத் தோரணையில். அவள் அமைதியாக நின்றுவிட அவனுடைய பிரத்தியேக அலுவலக தளத்தில் இறங்கியவர்கள் உள்ளே சென்று அவனுடைய ‘கேபின்’குள் நுழைந்தனர்.


அவளை உட்காருமாறு கைக் காட்டிவிட்டு அவனுடைய இருக்கையில் போய் அவன் அமர்ந்துகொள்ள, அவளும் உட்காரவும், "என்ன டிசைட் பண்ணியிருக்க?"


நேரடியாக விஷயத்திற்கு வந்தான் அவன். "இங்கேயே கன்டின்யூ பண்ணலாம்னு" அவள் சுருக்கமாகப் பதில் சொல்ல, அவனுடைய கண்கள் ஒளிர்ந்தன.


"ஸ்மார்ட்” என அவளை மெச்சியவன், "தென் ஹெச் ஆர் ப்ரொசீஜர்ஸ் எல்லாத்தையும் முடிச்சிட்டு இங்கேயே வந்திடு. இனிமேல் உன் கேபினும் இதுதான்"


அவன் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் சொல்ல, ‘ஐயோ. நாள் முழுக்க இவன் கூடவேவா?' எனத் திடுக்கிட்டவள், "நோ.. நோ.. எனக்கு அந்த கேபினே ரொம்ப கம்ஃபர்டப்ளாதான் இருக்கு" என அவசரமாக மறுத்தாள்.


"ஆனா நீ இங்க இருந்தாதான் எனக்கு கம்ஃபர்டப்ளா இருக்கும். ஐ மீன் என்னோட வேலைக்கு. சோ ஐ காண்ட் லெட் யூ கோ எனி வேர்” என்றான் அவன் உறுதியாக.


அவனுடைய வார்த்தைகளில் மாளவிகாவின் விழிகள் கலவரத்துடன் அவனை நோக்க, "நேத்து நான் உன்னை கூப்பிட்ட உடனே நீ இங்க வந்திருந்தா உனக்கு இந்த நிலைமை வந்திருக்காது. என் கிட்ட வேலை செய்ய பிடிக்கலன்னு சொன்னல்ல? இங்க வேலை செய்யறவரைக்கும் நைன் டு ஃபைவ் நீ என் முகத்தை மட்டும்தான் பார்த்துட்டு இருக்கணும். உனக்கு வேற ஆப்ஷனே இல்ல. என் பேச்சைக் கேட்காம உன்னைத் தேடி என்னை வர வெச்ச இல்ல. அதுக்கு உனக்கு கிடைச்சிருக்கற ஒரு சின்ன பெனாலிட்டி இதுன்னு வெச்சுக்கோ அவ்வளவுதான்" நக்கலும் நையாண்டியும் போட்டிப் போட்டது மித்ரனின் குரலில்.


இலகுவாக தோள்களை குலுக்கியவள், "இதுல என்ன பிரச்சனை இருக்கு மிஸ்டர் அக்னிமித்ரன். இந்த ஆஃபிஸ்ல எங்க உட்கார்ந்து வேலை செய்ய சொன்னாலும் எனக்கு ஓகே தான். நீங்க எனக்குச் சம்பளம் கொடுக்கறீங்க. நான் வேலை செய்ய போறேன். தட்ஸ் இட். மோர் ஓவர் உங்க முகம் பார்க்க அவ்வளவு பயங்கரமாகவா இருக்கு. நயன் டு ஃபைவ் அதை பார்க்கறதெல்லாம் எனக்கு ஒரு தண்டனை மாதிரி சொல்றீங்க”


அவனுக்குப் பதில் கொடுத்துக்கொண்டே போனாள் தன் இயல்பிற்குத் திரும்பியிருந்த மாளவிகா.


அடக்கப்பட்ட சிரிப்படன் வியப்பும் ரசனையுமாக அவளையே பார்த்திருக்கும் அக்னிமித்ரனுடைய மனதை ஆளுவாளா மாளவிகா?.


விடை காலத்தின் கைகளில்.

Recent Posts

See All
En Manathai Aala Vaa - 48

மித்ர-விகா 48 சில தினங்களுக்குப் பின் அலுவலகம் வந்திருந்தாள் மாளவிகா மித்ரனுடன். அவளுடைய பேச்சுக்கள் கொஞ்சம் குறைந்தது போலவே தோன்றியது....

 
 
 
En Manathai Aala 50 (Final)

மித்ர-விகா-50 (இறுதி அத்தியாயம்) அவளுக்காக விட்டுக் கொடுத்துப் போகிறான் என்கிற ஒரே காரணத்துக்காக அவள் இஷ்டப்படி தன்னை ஆட்டிப் படைக்கிறாள்...

 
 
 
En Manathai Aala Vaa 47

மித்ர-விகா-47 அன்று இரவே, அவர்களுடைய குடும்ப மருத்துவர் ஆனந்தை அழைத்து அவரை நேரில் சந்திக்க வருவதாகச் சொன்னவன் சில நிமிடங்களிலேயே...

 
 
 

5 comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación
chittisunilkumar
25 sept 2022

Iva mattum paisa kuduthutu poi irunda appo terimji irukum sir ku, malavika nee edukum konjam avanai avoid panradu nallathu unnai avan vazhila vila vekkave theeya velai parkuran

Me gusta

Sumathi Siva
Sumathi Siva
25 sept 2022

Wow excellent

Me gusta

Wow the episodes are too good. Can’t stop reading

Me gusta
Contestando a

Thank You so much

Me gusta

ஆஹா மாளவிகாவுக்கு மித்திரனிடன் வேலை பார்ப்பதில், அவளுக்கு ஒரு தெளிவு வந்து விட்டது போல், தைரியமாக அவனுக்கு பதில் கொடுக்கிறாள், இனி என்ன அடுத்து பார்ப்போம் 👌👌👌👍👍👍🌺🌺🌺

Me gusta
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page